Saturday, 9 August 2014

அப்பாவியாக வாழ்ந்து காட்டிய "தர்மதுரை''

"ஸ்டைல் மன்னன்'' ரஜினிகாந்த், குணச்சித்திர வேடம் ஏற்று, வெற்றிக்கொடி நாட்டிய படங்களில் ஒன்று "தர்மதுரை.''

`ராசி கலாமந்திர்' தயாரித்த படம் இது. ரஜினிக்கு ஜோடி கவுதமி. வசனத்தை பஞ்சு அருணாசலம் எழுத, ராஜசேகர் டைரக்ட் செய்தார். இசை: இளையராஜா.

இந்தப் படத்தில், ரஜினியின் தந்தையாக பிரபல மலையாள நடிகர் மது நடித்தது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் தம்பிகளாக நிழல்கம்ரவி, சரண்ராஜ், விஜய்பாபு ஆகியோர் நடித்திருந்தனர்.

"அப்பாவியாய் இருப்பது தவறில்லை. மற்றவர்களிடம் ஏமாந்து வாழ்க்கையை தொலைக்கும் அளவுக்கு அப்பாவியாய் இருப்பதுதான் தவறு'' என்பதை கதைக் கருவாக்கியிருந்தார்கம்.

சொந்த சகோதரர்களுக்காக தன் வாழ்வை பணயம் வைத்து பாதிக்கப்பட்ட ரஜினி, தனது பிற்பகுதி வாழ்க்கையிலாவது மீண்டாரா? என்பதை அழுத்தமான காட்சிகளுடன் தந்திருந்தார், டைரக்டர் ராஜசேகர்.

கதை

தம்பிகளுக்காக எதையும் செய்யும் ஒரு அப்பாவி அண்ணன் ரஜினி. தம்பிகம் இந்த அப்பாவி அண்ணனை தங்கம் சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொம்கிறார்கம்.

ஆனால் இது அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. "பாசமாக இரு; ஆனால் ஏமாளியாக இருக்காதே!'' என்று ரஜினிக்கு அவ்வப்போது எடுத்துச்சொல்கிறார். ஆனால் ரஜினி கேட்பதாக இல்லை. "நான் வாழ்வதே தம்பிகளுக்காகத்தான்'' என்கிறார்.

"உன் தம்பிகம் சுயநலக்காரர்கம். அவர்களை நம்பி ஏமாந்து போகாதே'' என்று மறுபடியும் எச்சரிக்கிறார். ரஜினி அதைக் கேட்கவில்லை.

இதனால் "என் மரணத்துக்குப் பிறகுதான் நான் கூறுவதன் உண்மையை உணர்வாய். அப்போதாவது சுதாரித்துக் கொண்டு, உன்னைக் காப்பாற்றிக் கொம்'' என்கிறார், அப்பா.

காலம் விரைகிறது. ரஜினிக்கும் திருமணமாகிறது. மனைவி கவுதமியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அப்பா இறந்து போகிறார்.

இதன் பிறகுதான் விதி விளையாடுகிறது. ரஜினியின் தம்பிகளில் ஒருவர், சந்தர்ப்ப சூழ்நிலையால் கொலையாளி ஆகிவிடுகிறார். ஜெயிலுக்குப் போனால் மனைவி, குழந்தைகம் நிர்க்கதியாகி விடுவார்கம் என்று பயப்படும் அவர், தனது அண்ணன் ரஜினியிடம் தன்னைக் காப்பாற்றும்படி கண்ணீர் விடுகிறார்.

கொலைக்குற்றம் என்றதும் தயங்கும் ரஜினியிடம், "லட்சங்களை வாரியிறைத்து உன்னை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றி விடுவோம். எனக்காக ஜெயிலுக்குப் போ அண்ணா'' என்று வேண்டுகிறார், தம்பி. மற்ற இரண்டு தம்பிகளும், ரஜினியிடம் கெஞ்சுகிறார்கம். அதனால், செய்யாத குற்றத்தை தான் செய்ததாகக் கூறி பழியை ஏற்கிறார், ரஜினி. அவரை போலீஸ் கைது செய்கிறது. கோர்ட்டு அவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கிறது.

தம்பிகளிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. தம்பிகளின் துரோகத்தை தெரிந்து கொம்கிறார், ரஜினி.

தண்டனைக் காலம் முடிந்து வெளிவரும் அவர், மனைவி கவுதமியை ஒரு வீட்டில் வேலைக்காரியாக இருப்பதைப் பார்க்கிறார். தன் சகோதரர்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக்கொண்டு, கடுமையாக உழைக்கிறார். படிப்படியாக முன்னேறி, சகோதரர்களை விட உயர்ந்த நிலைக்கு வருகிறார். அவரைப் பொறுத்தவரையில் சகோதரர்கம் விஷயத்தில் `யாரோ ஒருவர்' போல நடந்து கொண்டு அவர்களை ஒதுக்கி விடுகிறார்.

ஆனாலும் அப்படியே இருந்துவிட முடியாமல், சகோதரர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை வருகிறது. அதில் இருந்து தப்பிக்க சகோதரர்கம் அண்ணனின் உதவியை நாடுகிறார்கம். தங்கம் துரோகத்தை மன்னித்து, இக்கட்டான இந்த நேரத்தில் உதவவேண்டும் என்று வேண்டுகிறார்கம்.


ரஜினியின் மனம் மாறுகிறது. சகோதரர்களுக்காக களம் இறங்கி அவர்களின் எதிரிகளை துரத்தியடிக்கிறார். மனம் திருந்திய சகோதரர்கம், ரஜினியை தங்களுடன் சேர்ந்து இருக்கும்படி கேட்டுக்கொம்ள, அதை ஏற்க மறுத்துவிடுகிறார், ரஜினி. தன் வழியில் தன் மனைவி, குடும்பம் என்று வாழ்க்கையில் உயர்ந்து நிற்கிறார்.

இந்தக் கதையை விறுவிறுப்பாக படமாக்கியிருந்தார், ராஜசேகர்.

பொங்கல் வெளியீடு

பொதுவாக, பொங்கல் தினத்தன்று வெளியிடப்படும் ரஜினியின் படங்கம் பெரிய வெற்றி பெறும் என்று, விநியோகஸ்தர்கம் கருதினார்கம்.

எனவே, 14-1-1991 பொங்கலன்று படம் திரையிடப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், படப்பிடிப்பு வேகமாக நடந்தது. ஆயினும், படம் முடிவடைய கொஞ்சம் தாமதமாகலாம் என்ற நிலை ஏற்பட்டது.

72 மணி நேரம் படப்பிடிப்பு

இதை அறிந்த ரஜினிகாந்த், பட அதிபர்களின் வேண்டுகோளை ஏற்று இரவு - பகலாக படப்பிடிப்பில் கலந்து கொண்டார். 72 மணி நேரம் தொடர்ந்து நடித்தார்!

படப்பிடிப்பு நடந்த அதே வேகத்தில், `டப்பிங்', `ரீ ரிக்கார்டிங்' வேலைகம் மூன்றே நாட்களில் நடந்து முடிந்தன.

திட்டமிட்டபடி பொங்கலன்று படம் திரையிடப்பட்டது.

படம் முழுக்க ரஜினியின் உணர்ச்சிப் பிரவாக நடிப்பை ரசிக்க முடிந்தது. ஜெயிலில் இருந்து வந்த ரஜினி பாடும் "அண்ணன் என்ன தம்பி என்ன! சொந்தம் என்ன பந்தம் என்ன!'' என்ற பாடல் பிரபலமானது. ரஜினிக்காக கே.ஜே.ஜேசுதாஸ் பாடியிருந்தார்.

படம் 25 வாரங்கம் ஓடி, வெம்ளி விழா கொண்டாடியது.

(ரஜினிக்கும், கமலுக்கும் மோதலா? - நாளை)

*********

ரஜினி `சுயதரிசனம்'
நம் வாழ்க்கையில் அம்மா, அப்பா, நேரம் ஆகிய மூன்றும் முக்கியம். இந்த மூன்றையும் இழந்து விட்டால், மீண்டும் பெறமுடியாது.

அம்மா, அப்பாவுக்கு அடுத்த இடத்தை நேரத்துக்கு - அதாவது காலத்துக்கு கொடுத்திருக்கிறேன். இன்றைய தினத்தை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். இன்றைய தேதி மீண்டும் நம் வாழ்க்கையில் வராது. நேரத்தை நாம் ஏமாற்றக்கூடாது. நேரத்தை நாம் ஏமாற்ற ஆரம்பித்தால், நேரம் நம்மை ஏமாற்ற ஆரம்பித்து விடும்.
நேரத்தை சரியாப் பயன்படுத்தி, நமக்கும், நம் குடும்பத்துக்கும், சமுதாயத்துக்கும் பயன்படுகிற முறையில் நாம் வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.''

- ரஜினிகாந்த் 

கூடு விட்டு கூடு பாய்ந்தார், ரஜினி! எமலோகத்தில் கலாட்டா!

ரஜினிகாந்த் புதுமாதிரியான வேடம் தாங்கி நடித்த படம் "அதிசயப்பிறவி.''

தெலுங்கில் பிரமாண்டமான படங்கம் எடுப்பதில் புகழ் பெற்ற ஏ.பூர்ணசந்திரராவ், தமது லட்சுமி புரொடக்ஷன்ஸ் சார்பில் "யமுடிக்கி மொகுடு'' என்ற படத்தைத் தயாரித்தார்.

அதை அவரே, "அதிசயப்பிறவி'' என்ற பெயரில் தமிழில் தயாரித்தார். எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்தார்.

பஞ்சு அருணாசலம் வசனம் எழுத, இளையராஜா இசை அமைத்தார்.

புது மாதிரியான கதை.

ரஜினி இரண்டு வேடத்தில் நடித்த படம். எமலோக கலாட்டாக்களில் ரசிகர்களை கலகலக்க வைத்த படம்.


ஒரு ரஜினி அப்பாவி. இன்னொரு ரஜினி `அடிதடி' பேர்வழி.

தவறு எங்கே நடந்தாலும் தட்டிக் கேட்கும் ரஜினி, காதலி ஷீபாவுடன் (இந்தி நடிகை) ஆட்டம், பாட்டம் என்று ஜாலி பண்ணுகிறார்.

அப்பாவி ரஜினி, பணக்காரர். பெற்றோர் சதிகாரர்களால் கொல்லப்பட்ட நிலையில் ரவுடி செந்தாமரையிடம் வளர்கிறார். ரஜினி வாலிப பருவத்தை எட்டியதும் உயில்படி சொத்து அவர் கைக்கு வந்துவிடும். அப்போது சொத்தை பிடுங்கிக்கொண்டு அவரை தீர்த்துவிடவேண்டும் என்பது செந்தாமரையின் திட்டம்.

எமலோகத்தில் குழப்பம்

இந்த நேரத்தில் எமலோகத்தில் ஒரு குழப்பம் ஏற்படுகிறது. யாரோ ஒருவனின் உயிரைப் பறிக்க வந்த சித்திரகுப்தன் தவறுதலாக `அடிதடி' ரஜினியின் உயிரைப் பறித்து விடுகிறான். எமலோகத்தில் எமதர்மன் ரஜினியைப் பார்த்து குழப்பம் அடைகிறான். அப்போதுதான் ஆம் மாறாட்டம் தெரியவருகிறது. ரஜினியிடம், "நீ திரும்பவும் பூலோகம் சென்றுவிடு'' என்கிறார், எமதர்மன்.

அதற்கும் ஒரு விபரீதம் நடந்து விடுகிறது. `அடிதடி' ரஜினியின் உடலை அவரது உறவினர்கம் எரித்து விடுகிறார்கம்.

இதனால் கோபத்துடன் மறுபடியும் எமலோகத்தில் எமதர்மனை சந்திக்கிறார், அடிதடி ரஜினி. "நீ விரும்பினால் யாருடைய உடலிலாவது சேர்ந்து கொம்ளலாம்'' என்று அவரை தாஜா செய்கிறார், எமதர்மன். சம்மதிக்கும் அடிதடி ரஜினியிடம் பல `ரஜினி'க்கம் காட்டப்படுகிறார்கம். (ரஜினி நடித்த படங்களில் அவர் நடித்த கேரக்டர்களை ஒவ்வொன்றாக காட்டுகிறார்கம்) இது எதையும் பிடிக்காத `அடிதடி' ரஜினி, கடைசியில் அப்பாவி ரஜினியை `ஓகே' சொல்கிறார்.

இப்போது அப்பாவி ரஜினியின் உடலுக்கும் `அடிதடி' ரஜினியின் ஆத்மா புகுந்து கொம்கிறது. இது தெரியாத செந்தாமரையின் ஆட்கம், சொத்தை தங்கம் பெயருக்கு மாற்றித்தர மிரட்டுகிறார்கம். ரஜினி கொடுக்கிற அடி உதையில் ஆளுக்கு ஒரு திசைக்கு எகிறிப் பறக்கிறார்கம்.

அப்பாவி ரஜினியை விரும்பிய கனகாவுக்கு, நடந்தது எதையும் நம்பமுடியவில்லை.

தொடர்ந்து ரஜினியின் அடிதடியில் செந்தாமரை கோஷ்டி ஓட்டம் பிடிக்கிறது.


இரு மனைவிகம்

ஏற்கனவே அடிதடி ரஜினியின் ஜோடியான ஷீபா, அப்பாவியை விரும்பிய கனகா இருவருக்கும் இப்போது இந்த ஒரே ரஜினிதான் துணை. சூழ்நிலை உணர்ந்த ரஜினி இருவரையும் மணந்து கொண்டு காதலியர் பிரச்சினையையும் முடிவுக்கு கொண்டு வருகிறார்.

படம் முழுக்க ஜாலி மயம். குறிப்பாக எமலோகத்தில் எமதர்மன் வினுசக்ரவர்த்திக்கும், ரஜினிக்குமான கலாட்டாக்கம் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தது.

"சிங்காரி பியாரி பியாரி'', "உன்னைப் பார்த்த நேரம்'', "யார் வந்தது நெஞ்சுக்கும்ளே'', "பாட்டுக்கு பாட்டெடுக்கவா'' போன்ற பாடல்கம் ரசனைக்குரியவை.

படத்தில் "சோ'', நாகேஷ், செந்தாமரை, வி.கே.ராமசாமி தவிர, `கிழக்கே போகும் ரெயில்' படத்தில் பாரதிராஜாவால் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்ட சுதாகரும் நடித்திருந்தனர். படத்தில் வில்லனும் இவரே. காமெடியும் இவரே.

மாதவி, கவுரவ வேடத்தில் தோன்றினார்.

நிறைய செலவு செய்து, பிரமாண்டமான செட்டுகம் அமைத்து படம் எடுத்திருந்த போதிலும், ரஜினி ரசிகர்களை கதை கவரவில்லை.

15-6-1990ல் வெளிவந்த இப்படம் 75 நாட்கம் ஓடியது.

(அப்பாவியாக வாழ்ந்து காட்டிய "தர்மதுரை'' - திங்கட்கிழமை)

***

ரஜினியின் `சுயதரிசனம்'

"நீ லாயக்கில்லை'' என்று யாராவது என்கிட்ட சொன்னா, `நான் லாயக்கு'ன்னு நிரூபிப்பேன்.

பெங்களூரில் கண்டக்டராக இருந்தபோது சினிமாவில் நடிக்க வேண்டுமென்று ஒரு வெறியே இருந்தது. என் தந்தையோ, "ஆமா, நீ பெரிய மன்மதன்! சினிமாவிலே சேர்ந்து ஹீரோவாகப்போறே'' என்று இளப்பமாகச் சொன்னார். அதுவே எனக்கு பெரிய சவாலாக இருந்தது.
நான் ஹீரோவாக வேண்டும் என்று ஆசைப்பட்டதே கிடையாது. வில்லனாகத்தான் வரவேண்டுமென்று நினைத்தேன். முதலில் கன்னடப் படத்தில்தான் நடிப்பேன் என்று நினைத்தேன். தமிழில்தான் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆரம்பம் முதலே தமிழ் கற்றுக்கொண்டு என் சொந்தக் குரலில் பேசவேண்டுமென்று தீர்மானமாக இருந்து அதை செயல்படுத்தி வந்தேன்.
அதுபோல் `அந்தா கானூன்' இந்திப்படத்தின் சண்டைக் காட்சிகளில் நடிக்கும்போது, `ஸ்டண்ட் மாஸ்டர்களெல்லாம் என்னை மதிக்கவே மாட்டார்கம். படப்பிடிப்பில் ஷாட்டுக்கு என்னை அழைக்கும்போது கூட, சொடக்கு போட்டுத்தான் கூப்பிடுவார்கம். நான் விதம் விதமாக ஸ்டைல் செய்வதற்கு என்னை அனுமதிக்கவே மாட்டார்கம். தாங்கம் சொல்லிக் கொடுப்பதை அப்படியே செய்ய வேண்டுமென்பார்கம்.

`அந்தா கானூன்' ஹிட்டாகி, `கங்குவா' ஹிட்டாகி, அடுத்து `ஜான் ஜானி ஜனார்த்தன்' உருவானபோது எனக்குக் கிடைத்த மரியாதையே வேறு.

சத்யா மூவிஸ் வெம்ளி விழா ஆண்டில் ரஜினி நடித்த வெம்ளி விழா படம் - "பணக்காரன்''

ஆர்.எம்.வீரப்பனின் "சத்யா மூவிஸ்'' அதன் வெம்ளி விழா ஆண்டையொட்டி, ரஜினியை வைத்து "பணக்காரன்'' என்ற படத்தைத் தயாரித்தது. அது 25 வாரங்களுக்கு மேல் ஓடி, வெம்ளி விழா கொண்டாடியது.

"லாவரிஸ்'' என்ற இந்திப்படம், "நாதேசம்'' என்ற பெயரில் தெலுங்கில் தயாரிக்கப்பட்டது. அந்த கதையை வைத்து தமிழில் தயாரிக்கப்பட்ட படம் "பணக்காரன்.''

இந்தப் படத்துக்கு வசனம் எழுதி, டைரக்ட் செய்தவர் பி.வாசு.

ரஜினியுடன், கவுதமி இணைந்து நடித்தார்.

கதை

திருப்பங்கம் நிறைந்த குடும்பக்கதை "பணக்காரன்''

கோடீசுவரரான விஜயகுமார், பாடகி சுமித்ராவை திருமணம் செய்து கொம்வதாகக் கூறி ஏமாற்றி, கர்ப்பிணி ஆனதும் கைவிட்டு விடுகிறார்.

கர்ப்பிணியான சுமித்ராவுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. மாமா ராதாரவி, தாயார் சுமித்ரா ஆகியோரின் வாழ்க்கைப் போராட்டத்தில் குழந்தை ஒரு ரவுடியிடம் வந்து சேர்கிறது.

சிறுவன் வாலிபனாகிறான். வேலை தேடும்போது தனது அப்பா யார் என்பது தெரிகிறது. அவர் கோடீசுவரர். இப்போது அவருக்கு இன்னொரு குடும்பம், குழந்தைகம் இருக்கிறார்கம்.

என்றாலும் தன் தாயார் மீதான களங்கம் துடைக்கப்பட முயற்சிகம் மேற்கொம்கிறான். பல்வேறு அவமானங்கம் அடைகிறான். ஆனாலும் எடுத்துக்கொண்ட முயற்சியில் வென்று, கோடீசுவரரான விஜயகுமாருடன் தனது தாயாரை மறுபடியும் இணைத்து வைக்கிறான்.

உறவுகம் புனிதமானவை. அதை "பணம்'' என்ற போர்வைக்கும் போட்டு புதைத்து விடக்கூடாது என்பதை விளக்கிய படம்.


பெண் வேடம்

அனாதை இளைஞனாக - தாயின் அவமானத்தை துடைக்கப் போராடும் இளைஞனாக ரஜினி அற்புதமாக நடித்தார்.

ஒரு கட்டத்தில் பெண் வேடத்தில் தோன்றி அசத்தினார்.

ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் கவுதமி. ரஜினி - கவுதமிகடிகார முட்களுடன் இணைந்து பாடும், "இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது'' என்ற பாடல் புதுமையாக படமாக்கப்பட்டு ரசிகர்களை கவர்ந்தது.

தனது நிலையை எண்ணி ரஜினி பாடுவதாக வரும், "நான் உம்ளுக்கும்ள சக்கரவர்த்தி; ஆனா உண்மையிலே மெழுகுவர்த்தி'' என்ற பாடல் காட்சியில் ரஜினியின் உருக்கமான நடிப்பு நெகிழ வைத்தது.

படத்தில் வரும் "நூறு வருஷம் இந்த மாப்பிம்ளையும் பொண்ணும்தான் பேரு விளங்க இங்கே வாழணும்'' என்ற பாடல், திருமண வீடுகளில் நிரந்தரமாகி விட்டது.

புவனா ஒரு கேம்விக்குறி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த சுமித்ரா, இந்தப் படத்தில் ரஜினிக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

1990 பொங்கலுக்கு வெளிவந்த இந்தப்படம், 25 வாரங்கம் ஓடி, வெம்ளி விழா கொண்டாடியது.

மாப்பிம்ளை

ரஜினியின் மற்றொரு வெற்றிப்படம் "மாப்பிம்ளை.'' தெலுங்குப்படம் ஒன்றை தழுவி, வசனத்தை பஞ்சு அருணாசலம் எழுத, ராஜசேகர் இயக்கினார்.

திமிர்த்தனமாக நடந்து கொம்ளும் ஒரு மாமியாரை, மருமகன் அடக்கி புத்தி புகட்டும் கதை. (கிட்டத்தட்ட "பணமா, பாசமா?'' மாதிரி)

ராஜராஜேஸ்வரி என்ற பணக்கார மாமியாராக, ஸ்ரீவித்யா முதன் முதலாக `வில்லி' முகம் காட்டிய படம்.

கதை

ராஜராஜேஸ்வரிக்கு 3 மகன்கம். ஒரே மகம். மகம் அமலா வெளிïரில் தங்கி மருத்துவப் படிப்பை தொடர்கிறாம். அந்த ஊரில் வேலையில் இருக்கும் ரஜினிக்கும், அமலாவுக்கும் காதல் ஏற்படுகிறது. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ரஜினியின் தங்கை, பணக்கார ராஜராஜேஸ்வரியின் மகன் ராஜா மீது காதலாகிறாம். `காதல்' எல்லை மீறியதில் தவறு நிகழ்ந்துவிட, நிச்சயம் திருமணம் செய்து கொம்கிறேன் என்று சத்தியம் செய்கிறான், ராஜா. சொன்னபடி தனது தாயார் ராஜராஜேஸ்வரியிடம் காதலியை அழைத்துப்போகிறான்.

வெகுண்டெழுந்த ராஜராஜேஸ்வரி, மகனின் காதலியையும், அவம் தாயாரையும் தனது செல்வாக்கால் போலீசில் மாட்டிவிடுகிறாம். தாயாரும், தங்கையும் ஜெயிலில் இருக்கும் விஷயம், வெளிïரில் இருக்கும் ரஜினிக்கு தெரியவர, தாயாரையும், தங்கையையும் ஜெயிலில் சந்திக்கிறார்.

தங்கை மூலம் காதலன் யார் என்பதை தெரிந்து கொண்ட ரஜினி, ராஜாவை கண்டுபிடித்து நொறுக்குகிறார். ஆனால் ராஜா நல்லவன். அவன் தாயாரின் சூழ்ச்சிதான் இவ்வளவுக்கும் காரணம் என்று ரஜினி தெரிந்து கொம்கிறார். ஜெயிலில் இருந்து தாயாரையும், தங்கையையும் விடுவித்து, ரஜினியின் தங்கைக்கு ராஜா ஒரு கோவிலில் தாலி கட்டுகிறான்.

ஆனால் நடந்தது எதுவும் ராஜராஜேஸ்வரிக்கு தெரியாது. ரகசியமாக நடந்த இந்த திருமணத்தை ஊரறியச் செய்யவேண்டும், தங்கை அந்த வீட்டு மருமகளாக ஏற்றுக்கொம்ளப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் ரஜினி சில முயற்சிகளை எடுக்கிறார்.

அப்போதுதான் தன்னை விரும்பிய அமலாவும், தன் தங்கை கணவர் ராஜாவும் அண்ணன் - தங்கை என்று தெரிய வர, ராஜராஜேஸ்வரிக்கு பாடம் புகட்ட திட்டம் போடுகிறார், ரஜினி. அமலாவை மணந்து கொண்டு, ராஜராஜேஸ்வரி முன்பாக போய் நிற்கிறார்.


அதிர்ந்து போன ராஜராஜேஸ்வரி தனது மருமகன் ரஜினிக்கு அடுக்கடுக்காக பல தொல்லைகம் கொடுக்கிறார். "முதல் இரவு'' கூட நடக்கவிடாமல் தடுக்கிறார். ஆனால், தடைகம் தகர்க்கப்பட்டு ரஜினி வெற்றி பெறுகிறார். தோல்வியில் ஆத்திரமான ராஜராஜேஸ்வரி, மருமகன் என்றும் பாராமல் ரஜினியை கொல்ல அடியாட்களை ஏவி விடுகிறார். ஆனால் அத்தனை பேரும் அடிவாங்கிக் கொண்டு ஓடுகிறார்கம். ரஜினியும் மனைவி அமலாவுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

இந்த நிலையில் ராஜராஜேஸ்வரி தனக்கு யார் பாதுகாப்பு என்று நினைத்தாளோ, அவர்கம் அத்தனை பேரும் அவம் பணத்தை - திரண்ட சொத்தை கபளீகரம் செய்வதற்காகவே அவளுடன் இருக்கிறார்கம் என்பதை தெரிந்து கொம்கிறாம். சுதாரித்து அவர்கம் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் அவர்கம் முந்திக்கொண்டு ராஜராஜேஸ்வரியை கொடுமைப்படுத்தி சொத்துக்களை தங்கம் பெயருக்கு மாற்றித்தர கேட்கிறார்கம்.

ரஜினிக்கு இந்த விஷயம் தெரியவர, எதிரிகளை பந்தாடி, மாமியாரை காப்பாற்றுகிறார். திருந்திய மாமியார், ரஜினியை தனது `மாப்பிம்ளை' என்பதை ஊரறியச் செய்கிறார். ரஜினியின் தங்கையை தன் மருமகளாகவும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொம்கிறார்.

மாமியார் ஸ்ரீவித்யா - மருமகன் ரஜினி இருவரும் மோதிக்கொம்ளும் ஒவ்வொரு காட்சியும் கலகலப்பானவை. ரஜினி தனக்கே உரிய பாணியில் காமெடியிலும் கலக்கியிருந்தார்.

நிழல்கம்ரவி, சோனியா, லலிதாகுமாரி, எஸ்.எஸ்.சந்திரன், ஜெய்சங்கர், வினுசக்ரவர்த்தி ஆகியோரும் நடித்திருந்தனர்.

இசை: இளையராஜா. "மானின் இரு கண்கம் கொண்ட மானே மானே'', "என்னோட ராசி நல்ல ராசி, அது எப்போதும் பெரியவங்க ஆசி'', "என்னதான் சுகமோ நெஞ்சினிலே'' போன்ற பாடல்கம் புகழ் பெற்றவை.

"ஏவி.எம்''மின் "ராஜா சின்ன ரோஜா'' கார்ட்டூன்களுடன் ரஜினி நடித்தார்! 80 ஆயிரம் படங்களை வரைந்து உருவாக்கிய காட்சி!

இந்தியாவிலேயே முதன் முறையாக, யானை, முயல், குரங்கு முதலான கார்ட்டூன் படங்களுடன் ("அனிமேஷன்'') ரஜினிகாந்த் நடித்தார்.

"ஏவி.எம்'' தயாரித்த "ராஜா சின்ன ரோஜா'' என்ற படத்துக்காக, மிகுந்த பொருட்செலவில் இந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

இந்தப்படம் 1989-ல் தயாரிக்கப்பட்டதாகும். கதை-வசனத்தை பஞ்சு அருணாசலம் எழுதினார். எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்தார்.

பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுத, சந்திரபோஸ் இசை அமைத்தார்.

இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கவுதமி நடித்தார்.

மற்றும் ராகவி, ஷாலினி, கோவை சரளா, எஸ்.எஸ்.சந்திரன், சின்னிஜெயந்த் ஆகியோர் நடித்தனர்.

புதுமை

இந்தப் படத்தில் ரஜினி, கவுதமி மற்றும் 5 குழந்தைகம் இடம் பெறும் பாடல் காட்சி ஒன்று வருகிறது. அந்த பாடல் காட்சியில், இந்த 7 பேருடன் யானை, முயல், குரங்கு முதலான மிருகங்கம் (கார்ட்டூன்களாக) ஆடிப்பாடுவது போல் படமாக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இதற்கு முன் கார்ட்டூன் சினிமா படங்கம் உருவாகியிருந்தபோதிலும், மனிதர்களுடன் கார்ட்டூன்கம் சேர்ந்து நடிப்பது இந்தியாவிலேயே இதுவே முதல் தடவை.

இப்படி கார்ட்டூன் காட்சிகம் அமைப்பதில், மும்பையைச் சேர்ந்த ராம்மோகன் பெரிய நிபுணர். அவர் ரொம்ப `பிசி'யாக இருந்த காலக்கட்டம் அது.

எனவே, பட அதிபர் ஏவி.எம்.சரவணன், முத்துராமனை அழைத்து, "படத்துக்கு இந்த அனிமேஷன் காட்சி முக்கியம். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. அதை சிறப்பாக எடுக்க வேண்டும். `அனிமேஷன்' நிபுணர் ராம்மோகன் ரொம்ப பிசியாக இருப்பதாக அறிந்தேன். நீங்கம் உடனடியாக மும்பை சென்று, அவருடைய சம்மதத்தைப் பெற்று வாருங்கம்'' என்றார்.

பூஜை அன்றே பயணம்

எனவே, படத்துக்கு பூஜை போடப்பட்ட அன்றே விமானம் மூலமாக முத்துராமன் மும்பை சென்றார். ராம்மோகனை சந்தித்து, விஷயத்தைச் சொன்னார்.

"இந்த மாதிரியான `அனிமேஷன்' பாடல் காட்சி எடுக்க, நான் 80 ஆயிரம் படங்களை வரையவேண்டும். அதற்கு ரொம்ப அவகாசம் வேண்டும். இப்போது எனக்கும்ள வேலையில், இந்த பொறுப்பை ஏற்பது இயலாத காரியம்'' என்று ராம்மோகன் கூறினார்.

ஆனால், முத்துராமன் விடவில்லை. "ஏவி.எம். எதையும் திட்டமிட்டு படமாக்கும் நிறுவனம். இந்த பாடல் காட்சியை முதலாவதாக படமாக்கி, உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். உடனடியாக நீங்கம் படம் வரைய ஆரம்பித்துவிடலாம். அதன்பின் 6 மாதம் கழித்துத்தான் படம் ரிலீஸ் ஆகும். உங்கம் வேலையை செய்து முடிக்க, போதுமான அவகாசம் கிடைக்கும்'' என்றார்.

அதன் பேரில், கார்ட்டூன்கம் வரைய ராம்மோகன் சம்மதித்தார்.

படமாக்கியது எப்படி?

"இந்தக் காட்சியை படமாக்கியது எப்படி?'' என்று முத்துராமனிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

"இந்த பாடல் காட்சியில் ரஜினி, கவுதமி ஆகியோருடன் 5 குழந்தைகம் பங்கு கொண்டார்கம்.

அவர்களுடன் யானை, முயல், குரங்கு முதலான மிருகங்கம் ஓடியாடுவது வெறும் கற்பனைதான். அக்காட்சியில் யானை எங்கிருந்து வரும், முயல் எப்படி ஓடி வரும் என்பதையெல்லாம் உதவியாளர்கம் விளக்கி, நடித்துக் காட்டினார்கம்.

அந்த மிருகங்கம் அந்தந்த இடங்களில் இருப்பதாக ரஜினியும், மற்றவர்களும் கற்பனை செய்துகொண்டு நடித்தார்கம்.

இதை நாங்கம் படமாக்கி மும்பை அனுப்பினோம். அதற்கு ஏற்றபடி, ராம்மோகன் கார்ட்டூன்கம் வரைந்தார். அவற்றையெல்லாம் அந்தந்த இடத்தில் பொருத்தமாக இணைத்து பாடல் காட்சியை உருவாக்கினோம்.

சிரமமும், பணச்செலவும் அதிகமாக இருந்தபோதிலும், அந்தக் காட்சி அழகாக அமைந்தது. குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்தது.

`குழந்தைகளை பெற்றோர்கம் பொறுப்போடு வளர்க்க வேண்டும். வேலைக்காரர்களிடம் விட்டுவிடக்கூடாது' என்ற கருத்தை இந்தப்படம் வலியுறுத்தியது. இதற்கு அந்தப் பாடல் காட்சி உதவியது.


குழந்தைகம்

இந்தக் காட்சியின் மூலம், தமிழ்நாட்டுக் குழந்தைகளின் மனதை ரஜினி வெகுவாகக் கவர்ந்தார்.

எங்கு போனாலும், "ரஜினி அங்கிம், ரஜினி அங்கிம்'' என்று குழந்தைகம் கூடிவிடுவார்கம்.

ஒருநாம் மூணாறில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, ரஜினியும், படப்பிடிப்புக்குழுவினரும் திரும்பிக் கொண்டிருந்தோம்.

ஒரு இடத்தில் ரோட்டில் சுமார் நூறு குழந்தைகம் கூடி நின்றார்கம். அனைவரும் பம்ளிக்கூட சீருடை அணிந்திருந்தார்கம்.

`ரஜினி அங்கிம் இந்த வழியாக வருவதாகக் கேம்விப்பட்டோம். அவரைப் பார்த்துவிட்டுப் போக, பம்ளிக்கூடத்திலிருந்து நேராக இங்கே வந்திருக்கிறோம்' என்றார்கம்.

அவர்களுடன் ரஜினி அன்புடன் பழகினார். ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார். "நன்றாகப் படிக்க வேண்டும்'' என்று முத்தம் கொடுத்து வாழ்த்தினார்.''

இவ்வாறு எஸ்.பி.முத்துராமன் கூறினார்.

20-7-1989 அன்று வெளிவந்த "ராஜா சின்ன ரோஜா'' 7 தியேட்டர்களில் நூறு நாட்கம் ஓடியது. அதன்பின் பகல்காட்சியாக தொடர்ந்து ஓடி வெம்ளி விழா கொண்டாடியது.

இந்தப்படம், தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு, அங்கும் வெற்றிகரமாக ஓடியது.

சிவா

கே.பாலசந்தரின் கவிதாலயா தயாரித்த படம் "சிவா.'' இதில் ரஜினிகாந்த், சோபனா நடித்தனர்.

வசனத்தை கண்ணன் எழுத, அமீர்ஜான் இயக்கினார். இசை: இளையராஜா.

5-5-1989-ல் வெளிவந்த இப்படம் 75 நாம் ஓடியது.

Saturday, 5 July 2014

"சண்டைக்காட்சிகளில் அசர வைத்தார்''

"சண்டைக்காட்சிகளில் அசர வைத்தார்''
டைரக்டர் ஜெகந்நாதன் வெளியிடும் தகவல்கள்
"மூன்று முகம்'' படப்பிடிப்பின்போது நிகழ்ந்த சுவையான சம்பவங்களை, டைரக்டர் ஏ.ஜெகந்நாதன் வெளியிட்டார்.

"சண்டைக் காட்சிகளில் எல்லோரையும் ரஜினி அசர வைத்தார்'' என்று அவர் கூறினார்.

டைரக்டர் ஏ.ஜெகந்நாதன் பத்திரிகையாளராக இருந்து, டைரக்டராக உயர்ந்தவர். எம்.ஜி.ஆர். நடித்த "இதயக்கனி'' உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியவர்.

"மூன்று முகம்'' படத்தை இயக்கியபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-

"பீட்டர் செல்வகுமார் எழுதிய மூன்று முகம் கதையை படமாக்குவது என்று சத்யா மூவிஸ் முடிவு செய்ததும், பட வேலைகள் தொடங்கின.

ரஜினி கேட்ட கேள்வி

படத்தின் டைரக்டர் யார் என்று ஆர்.எம்.வீ.யிடம் ரஜினி கேட்டிருக்கிறார். அவர் எனது பெயரை சொல்லியிருக்கிறார். "அவர் இயக்கிய படம் எதையும் இதுவரை நான் பார்த்ததில்லையே!'' என்று சொல்லியிருக்கிறார், ரஜினி.


உடனே ஆர்.எம்.வீரப்பன், "எங்கள் சத்யா மூவீசுக்கு எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனி என்ற வெற்றிப்படத்தை இயக்கியவர் ஜெகந்நாதன்'' என்று கூறியிருக்கிறார்.

"நான் இதயக்கனி படத்தை பார்க்க வேண்டுமே'' என்று ரஜினி சொல்ல மறுநாளே "இதயக்கனி'' படத்தை ரஜினிக்கு காட்ட ஏற்பாடு செய்தார், ஆர்.எம்.வீ.

ரஜினி, நான், சத்யா மூவிசின் மானேஜர் பழனியப்பன் மூவரும் படம் பார்த்தோம். படம் முடிந்ததும், "இந்தப்படத்தை எந்த வருஷம் இயக்கினீர்கள்?'' என்று ரஜினி கேட்டார். "1974-ம் வருஷம் எடுக்கப்பட்டு 1975-ல் ரிலீசானது'' என்றேன்.

உடனே ரஜினி, 1974-ல் நான் சினிமாவுக்கு வரவில்லை. அப்போதே எம்.ஜி.ஆர். சாரை வைத்து படம் இயக்கியிருக்கிறீர்கள். நான் நடிக்கும் இந்தப் படத்தை நீங்கள் இயக்குவதில் எனக்கு மகிழ்ச்சிதான்'' என்றார்.

பிரமிக்க வைத்த ஸ்டைல்கள்

படத்தில் நடிக்கும்போது, ரஜினியிடம் நான் கண்ட வேகம் பிரமிப்பானது. காக்கி சீருடையில் அலெக்ஸ் பாண்டியனாக அவர் காட்டிய கம்பீரம், செட்டில் நடக்கும்போது வெளிப்பட்ட அந்த மிடுக்கு, போலீஸ் நிலையத்தில் ஒரு குற்றவாளியிடம் பேசிக்கொண்டே இன்னொரு ரவுடியை உதைக்கும் ஸ்டைல் என படம் முழுக்க அதிரடி ஸ்டைல்களை வெளிப்படுத்தினார்.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை சென்னை துறைமுகத்துக்கு வந்திருந்த சரக்கு கப்பலில் 3 நாள் அனுமதி பெற்று எடுத்தோம். இந்த கிளைமாக்ஸ் காட்சியை பார்த்த பட அதிபர் ஏவி.எம்.சரவணன் பாராட்டியபோது, "மூன்றே நாளில் எடுத்து முடித்தோம்'' என்று சொன்னோம். அவருக்கு ஒரே ஆச்சரியம். "எப்படியும் ஒரு வாரமாவது ஆகியிருக்கும் என்று நினைத்தேன் என்று கூறினார்.

புதுமையான சண்டைக்காட்சி

இந்தப் படத்தின் சண்டைக் காட்சியில் ஒரு புதுமை செய்தேன். ரஜினி பறந்து வந்து ரவுடிகளை அடித்து உதைப்பதாக வரும் காட்சியில், ஒரு தடவை `ஜம்ப்' செய்யும்போதே, 4 பேரை உதைப்பது போல் காட்சி அமைத்தேன்.

இந்த சண்டைக்காட்சியை பார்த்ததும் ரஜினி ரொம்பவும் மகிழ்ச்சி அடைந்தார். "நீங்கள் சிறந்த தொழில் நுட்பக் கலைஞர்'' என்று பாராட்டினார்.


படம் ரிலீசாகி 150 நாட்களுக்கு மேல் ஓடியது. படத்துக்கான பாராட்டு விழா மதுரையில் நடந்தபோது போலீஸ் டி.ஐ.ஜி. ஒருவர் தலைமை தாங்கினார். அவர் பேசும்போது, "போலீஸ் துறையில் பயிற்சி எடுப்பவர்களுக்கு நாங்கள் பயிற்சி கொடுத்து உருவாக்குகிறோம். இதுவரை அப்படிச் செய்தோம். இனி பயிற்சி அவசியமில்லை. `மூன்று முகம்' படத்தை அவர்களுக்கு போட்டுக் காட்டினாலே போதும். ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதை இதைவிட சிறப்பாக சொல்ல முடியாது'' என்று பாராட்டினார்.

ஒரு பிடி சோறு

சண்டைக் காட்சிகளில் நடிக்க நேரும்போது ரஜினி சரிவர சாப்பிட மாட்டார். இப்படித்தான் ஒரு நாள் மதிய சாப்பாட்டு நேரம் வந்தது. ரஜினி வீட்டில் இருந்து மணக்க மணக்க மீன் குழம்பு சாப்பாடு வந்திருந்தது. மதியம் `பிரேக்' டைமில் ரஜினி என்னிடம், "சார்! இன்றைக்கு என்னோடு சாப்பிட வாங்க'' என்று கேட்டுக்கொண்டார்.

சாப்பாட்டு நேரத்தில் ரஜினி `லஞ்ச் பாக்சை' திறந்தார். மீன் குழம்பு வாசனை தூக்கியடித்தது. அந்த வாசனையை முகர்ந்தவர், மொத்த சாப்பாட்டையும் என் பக்கம் திருப்பி வைத்து, "இது உங்களுக்குத்தான்'' என்றார். ஒரு கரண்டி அளவுக்கு சாதம் எடுத்து அதில் கொஞ்சமாய் ரசம் மட்டும் ஊற்றி சாப்பிட்டார்.

ஒரு கை சாதம் மட்டும் அவர் சாப்பிட்டதில் எனக்கு அதிர்ச்சி. "ஏன் இப்படி?'' என்று கேட்டேன். அதற்கு அவர், "சண்டைக் காட்சியில் நடிக்கும்போது நிறைய சாப்பிட்டால் ரசிகர்கள் விரும்புகிற மாதிரி காட்சி அமையாது'' என்றார்.

ரஜினி மகள் ஐஸ்வர்யா திருமண வரவேற்பு நடந்தபோது மணமக்களை நானும் வாழ்த்தினேன். என்னைப் பார்த்ததும் ரஜினி தனது மகள் ஐஸ்வர்யாவிடம், "இவர் மூன்று முகம் படத்தின் டைரக்டர் ஏ.ஜெகந்நாதன் '' என்று அறிமுகப்படுத்தினார். மூன்று முகத்துடன் என் முகமும் அவருக்குள் பதிந்து போனதை, அந்த நேரம் எனக்குள் பெருமிதமாக உணர்ந்தேன்.''

இவ்வாறு டைரக்டர் ஏ.ஜெகந்நாதன் கூறினார்.

("கராத்தே'', "குங்பூ'' சண்டைக்காட்சிகளில் ரஜினி - நாளை)

ரஜினி நடித்த திரைப்படங்கள்

81 அந்தா கானூன் (இந்தி) 07-04-1983 டி.ராமராவ்

82 தாய்வீடு 14-04-1983 ஆர்.தியாகராஜன்

83 சிவப்பு சூரியன் 27-05-1983 முக்தா சீனிவாசன்

84 ஜீத்ஹமாரி (இந்தி) 17-06-1983 ஆர்.தியாகராஜன்

85 அடுத்த வாரிசு 07-07-1983 எஸ்.பி.முத்துராமன்

86 தங்கமகன் 04-11-1983 எஸ்.ஏ.ஜெகநாதன்

87 மேரி அதாலத் (இந்தி) 13-01-1984 ஏ.டி.ரகு

88 நான் மகான் அல்ல 14-01-1984 எஸ்.பி.முத்துராமன்

89 தம்பிக்கு எந்த ஊரு 20-04-1984 ராஜசேகர்

90 கை கொடுக்கும் கை 15-06-1984 மகேந்திரன்

91 இதோ நா சவால் (தெலுங்கு) 16-06-1984 புரட்சிதாசன்

92 அன்புள்ள ரஜினிகாந்த் 02-08-1984 கே.நட்ராஜ்

93 கங்குவா (இந்தி) 14-09-1984 ராஜசேகர்

94 நல்லவனுக்கு நல்லவன் 22-10-1984 எஸ்.பி.முத்துராமன்

95 ஜான் ஜானி ஜனார்த்தன் (இந்தி) 26-10-1984 டி.ராமராவ்

96 நான் சிவப்பு மனிதன் 12-04-1985 எஸ்.ஏ.சந்திரசேகர்

97 மகா குரு (இந்தி) 26-04-1985 எஸ்.எஸ்.ரவிச்சந்திரன்

98 உன் கண்ணில் நீர் வழிந்தால் 20-06-1985 பாலுமகேந்திரா

99 வா பாதர் (இந்தி) 19-07-1985 தாசரி நாராயணராவ்

100 ஸ்ரீராகவேந்திரா 01-09-1985 எஸ்.பி.முத்துராமன்

மூன்று வேடங்களில் அசத்திய "மூன்று முகம்''

மூன்று வேடங்களில் அசத்திய "மூன்று முகம்''
ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடித்த "மூன்று முகம்'', அவருடைய முழுத் திறமையையும் வெளிப்படுத்தியது.

குறிப்பாக, அலெக்ஸ் பாண்டியன் என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் மிடுக்காகவும், கம்பீரமாகவுமë பேசி எல்லோரையும் பிரமிக்க வைத்தார்.

ஆர்.எம்.வீரப்பனின் "சத்யா மூவிஸ்'' தயாரித்த சூப்பர் ஹிட் படம் இது. கதையை பீட்டர் செல்வகுமார் எழுத, ஆர்.எம்.வி. திரைக்கதை அமைத்தார். பிறகு செல்வகுமார் வசனம் தீட்டினார். ஏ.ஜெகந்நாதன் டைரக்ட் செய்தார்.

கதை

திருப்பங்களும், நெஞ்சைத் தொடும் சம்பவங்களும் நிறைந்த படம் "மூன்று முகம்.''

நேர்மையும், கண்டிப்பும் நிறைந்த போலீஸ் "டி.எஸ்.பி'' அலெக்ஸ் பாண்டியன், தனது எல்லைக்குள் நடமாடும் கள்ளச்சாராய கோஷ்டிகளை களையெடுக்கிறார். இதனால் லட்சக்கணக்கில் நஷ்டத்தை சந்திக்கும் கள்ளச்சாராய கும்பலின் தலைவன் (செந்தாமரை) டி.எஸ்.பி.யை கொல்ல முடிவெடுக்கிறான். அதற்கான தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறான்.

மர்மக்குரல்

அலெக்ஸ் பாண்டியனìன் மனைவி ராஜலட்சுமி நிறைமாத கர்ப்பிணி. பிரசவ வலி எடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறாÖë. மனைவியை பார்க்க ஆஸ்பத்திரி வரும் வழியில் அலெக்ஸ் பாண்டியனுக்கு போன் வருகிறது. போனில் பேசிய பெண், ஒரு பாழடைந்த பங்களாவில் தன்னை அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறார்கள்'' என்று பதட்டமாய் கூறியவள், தான் கடத்தி வைக்கப்பட்டிருக்கும் பங்களா இருக்கும் இடத்தையும் கூறி தன்னைக் காப்பாற்ற வரும்படி கதறுகிறாள்.

இந்தப் போனுக்குப் பின்னணியில் தன்னை கொல்ல வகுக்கப்பட்டிருக்கும் சதித்திட்டம் பற்றி அறியாத அலெக்ஸ் பாண்டியன், தனியாளாய் அந்த பங்களாவுக்குள் போகிறார். அவருக்காக காத்திருந்த சாராயக்கும்பலின் தலைவனும், அவனது அடியாட்களும் அலெக்ஸ் பாண்டியனை தாக்கி கொன்று விடுகிறார்கள்.

இரட்டைக் குழந்தைகள்

அலெக்ஸ் பாண்டியன் இறந்த அதே நேரத்தில் அவரது மனைவிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. இரண்டுமே ஆண் குழந்தைகள்.

குழந்தை பிறந்த அதே நேரம் `ஜன்னி' வந்து தாயும் உயிர் விடுகிறாள்.

பிரசவத்துக்கு துணையாக வந்த அலெக்ஸ் பாண்டியனின் தாயார் சகாயமேரி, மகன் - மருமகள் இருவரும் ஒரே நேரத்தில் இறந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைகிறார். குழந்தைகளை வைத்துக்கொண்டு செய்வதறியாது திகைக்கிறாள்.

அதே ஆஸ்பத்திரியில் பணக்காரர் ஒருவரின் மனைவியும் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறாள். அவளுக்கு ஏற்கனவே இரண்டு முறை குழந்தை இறந்தே பிறந்ததால், இம்முறையாவது குழந்தை உயிருடன் பிறக்கவேண்டுமே என்ற கவலை. ஆனால் இம்முறையும் குழந்தை இறந்தே பிறக்க, அது தெரியாமல் அவள் மயக்க நிலையில் இருக்கிறாள்.

சகாயமேரியிடம் இருக்கும் இரட்டைக் குழந்தைகளில் ஒன்றை பணக்காரர் கேட்கிறார். தனது குழந்தை உயிருடன் இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே மனைவியை உயிரோடு பார்க்க முடியும் என்று கண்களில் நீர் மல்க அவர் சொன்னதால், இரண்டு ஆண் குழந்தைகளில் ஒன்றை பணக்காரரிடம் சகாயமேரி கொடுக்கிறாள்.

சகாயமேரியின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு, அவளிடம் இருக்கும் மற்றொரு குழந்தையை வளர்க்க மாதந்தோறும் பணம் அனுப்பி வைக்கிறார்.

சகாயமேரியின் பொறுப்பில் வளரும் குழந்தை `ஜான்' என்ற பெயரிலும், பணக்காரரிடம் வளரும் குழந்தை `அருண்' என்ற பெயரிலும் வளர்கிறார்கள். ஜான் அதிரடி, அடிதடி, ஜாலி என்று உருவாக, அருண் மேற்படிப்புக்காக அமெரிக்கா போகிறான்.


பிறந்த நாள்

படிப்பை முடித்து ஊருக்கு வரும் அருண் தனது 25-வது பிறந்த நாளை தடபுடலாக கொண்டாடுகிறான். இந்த விழாவுக்கு கள்ளச்சாராய தலைவனின் அடியாளாக இருந்து இப்போது தொழிலதிபர் அந்தஸ்தில் இருக்கும் சங்கிலிமுருகனும் அழைக்கப்பட்டு இருக்கிறார்.

பிறந்த நாள் `கேக்'கை வெட்ட அருண் கத்தியை கையில் எடுக்கும்போது, கேக்கில் ஒரு காட்சி அருண் கண்ணுக்கு தெரிகிறது. அலெக்ஸ் பாண்டியனை கள்ளச்சாராய கும்பலின் தலைவன் செந்தாமரை கத்தியால் குத்துவதாக விரியும் அந்தக் காட்சியை பார்த்த அருண், ஆவேசமாகிறான். தொழிலதிபர் சங்கிலிமுருகனின் சட்டையைப் பிடித்து இழுத்து உலுக்கியவன், "எங்கேடா உங்க பாஸ்?'' என்று கேட்கிறான்.

இந்த தகவல் செந்தாமரைக்குப்போக, அவர் துப்பறிந்து அலெக்ஸ் பாண்டியன் சாய லில் இருக்கும் அருண், பணக் காரரின் மகனல்ல, அலெக்ஸ் பாண்டியனின் மகனே என்பதை அறிந்து கொள்கிறார். இதனால் அவனையும் கொன்றுவிட திட்டம் தீட்டுகிறார். இதற்குள் அருணுக்கும் தனக்குள் தோன்றிய அந்த திடீர் உணர்வுக்கு விடை கிடைக்கிறது. தங்கள் அலுவலக பொறுப்பை மேற்கொள்ளும் அருண், சகாயமேரி என்ற பெண்ணுக்கு தனது அப்பா மாதாமாதம் பணம் அனுப்பி வரும் தகவலை தெரிந்து கொள்கிறான். அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளும் பொருட்டு சகாயமேரியின் இருப்பிடம் வருகிறான். அங்கே வந்த பிறகுதான், அலெக்ஸ் பாண்டியனுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளில் தானும் ஒருவன் என்ற உண்மை தெரியவருகிறது.

பழிக்குப்பழி

இரட்டை சகோதரர்கள் தங்கள் தந்தையை கொன்ற செந்தாமரை கும்பலை பழிவாங்க புறப்படுகிறார்கள். இதில் ஜான் முந்திக்கொண்டு, கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த செந்தாமரையின் ஆட்களை வெறியுடன் கொல்கிறான். விபரீதம் உணர்ந்த செந்தாமரை, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஜானை கத்தியால் குத்தி சாய்க்கிறார். அந்தக் கத்தியை பிடுங்கி செந்தாமரையின் வயிற்றில் கத்தியை பாய்ச்சுகிறான் ஜான்.

செந்தாமரை உயிரை விட்டுவிட, குற்றுயிராய் கிடக்கும் ஜானை தனது மடி மíது தூக்கி வைத்து கதறுகிறான் அருண். தனது தந்தையை கொன்ற கும்பலை பழிதீர்த்த நிம்மதியில், தம்பி அருணின் மடியில் உயிரை விடுகிறான், ஜான்.

மூன்று வேடங்களில் நடித்த ரஜினிக்கு இரண்டு ஜோடிகள். அலெக்ஸ் பாண்டியனுக்கு ராஜலட்சுமி, அருணுக்கு ராதிகா. ஜானுக்கு ஜோடி இல்லை.

வேகமும், விறுவிறுப்பும் நிறைந்த இந்தப்படம் மகத்தான வெற்றி பெற்றது. மூன்று வேடங்களையும், வெகு எளிதாக ஊதித்தள்ளி, ரசிகர்களைக் கவர்ந்தார், ரஜினி.

இந்தப் படத்துக்கு இசை அமைத்தவர்கள் சங்கர்-கணேஷ்.

படம் முழுவதும் வெறும் வேட்டி-சட்டையுடன் நடித்தார்!

ரஜினி நடித்த காவியம் `எங்கேயோ கேட்ட குரல்'
படம் முழுவதும் வெறும் வேட்டி-சட்டையுடன் நடித்தார்! 

ஸ்டைல் மன்னனாகவும், சூப்பர் ஸ்டாராகவும் மதிக்கப்பட்ட ரஜினிகாந்தை, ஒரு மகா நடிகராக உயர்த்திய படம் "எங்கேயோ கேட்ட குரல்.''

"பி.ஏ. ஆர்ட் புரொடக்ஷன்ஸ்'' பேனரில் பஞ்சு அருணாசலம் தயாரித்த படம் இது. கதை-வசனத்தை அவரே எழுதினார். இளையராஜா இசை அமைக்க, எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்தார்.

மாறுபட்ட படம்

ரஜினிகாந்த் நடித்த படங்களில் முற்றிலும் மாறுபட்டது "எங்கேயோ கேட்ட குரல்.'' படம் முழுக்க நான்கு முழ வேட்டியுடனும், சாதாரண சட்டையுடனும் தோன்றினார். ஆரம்பத்தில் இளைஞன். படம் முடியும்போது முதியவர்.

இதற்குமுன், "ஆறிலிருந்து அறுபது வரை'' படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தாலும், அது குடும்பக் கதை. இது, மாறுபட்ட கதை; யதார்த்தமான கதை; கம்பி மீது நடப்பது போன்ற கனமான கதை. படம் முழுவதும் கிராமத்திலேயே தயாரிக்கப்பட்டது.

பஞ்சாயத்து தலைவர் டெல்லி கணேஷ் - கமலா காமேஷ் ஆகியோருக்கு அம்பிகா, ராதா இருவரும் மகள்கள். பொன்னி (அம்பிகா) படித்தவள். நாகரீகத்தை விரும்புகிறவள். வீட்டு வேலை எதுவும் தெரியாது. அந்த ஊர் பெரியவருக்கு (வி.எஸ்.ராகவன்) செல்லப்பிள்ளை. காமாட்சி (ராதா) குடும்பப் பொறுப்புகளை உணர்ந்தவள்.

இவர்களுக்கு முறை மாப்பிள்ளை ரஜினிகாந்த்.

விருப்பம் இல்லாமலேயே ரஜினியை மணக்கிறார், அம்பிகா. ரஜினி அன்புடன் நெருங்கி வரும்போது, "போய் குளித்து விட்டு வாருங்கள். ஒரே வியர்வை நாற்றம்'' என்பார்.

இந்நிலையில் அம்பிகா கர்ப்பமாவார். அதைக் கலைக்க முயற்சிப்பார். தாயாரும், ரஜினியும் தடுத்து விடுவார்கள்.

குழந்தைக்கு தாய்ப்பால் கூட கொடுக்க மாட்டார்.

சலனம்

இந்நிலையில், அம்பிகா மீது அன்பு செலுத்திய பெரியவரின் மகனும், அவர் மனைவியும் மனப் பொருத்தம் இல்லாமல் பிரிந்து விடுகிறார்கள்.

"உன் வாழ்க்கையும் வெற்றி பெறவில்லை. என் வாழ்க்கையும் வெற்றி பெறவில்லை. நீ என்னுடன் சென்னைக்கு வந்துவிட்டால், இரு வரும் சேர்ந்து வாழலாம்'' என்று அம்பிகாவிடம் பெரியவரின் மகன் கூறுகிறார். ஒரு நிமிடத்தில் ஏற்படும் சலனத்தால், அவருடன் சென்னைக்கு செல்கிறார், அம்பிகா.

அங்கு சென்றதுமே அவர் மனம் மாறுகிறது. தன் தவறை உணருகிறார். மயக்கம் அடைந்து விழுகிறார். பிறகு, தீக்குளிக்க முயலுகிறார். சிறு காயத்துடன் தப்புகிறார்.

இதற்கிடையே `ஓடிப்போன' அம்பிகாவை, கிராமத்தை விட்டு பஞ்சாயத்து தள்ளி வைக்கிறது. ரஜினியின் துயரத்தைப் போக்க, ராதாவை அவருக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். அம்பிகாவின் குழந்தையை (மீனா) தன் குழந்தை போல ராதா வளர்க்கிறார்.

இந்த தகவல், அம்பிகாவை அழைத்துச்சென்ற பெரியவர் மகனுக்குத் தெரிகிறது. அதை அம்பிகாவிடம் கூறுகிறார். `கிராமத்துக்கு வெளியே எனக்கு நìலம் இருக்கிறது. அதை உனக்கு எழுதித் தருகிறேன். அங்கே வீடு கட்டிக்கொண்டு நீ வசிக்கலாம்'' என்று கூறி அனுப்பி வைக்கிறார்.

துறவு வாழ்க்கை

மனதில் சலனம் அடைந்தாலும், உடலில் களங்கப்படாத அம்பிகா, தன் கிராமத்துக்கு வெளியே ஒரு குடிசை போட்டுக்கொண்டு தன்னந்தனியே துறவி போல் வாழ்கிறார்.

இப்படியே 13 வருடம் ஓடுகிறது. தன் மகள் பருவப்பெண்ணாய் நடமாடுவதை தூரத்திலிருந்தே பார்த்து கண்ணீர் விடுகிறார், அம்பிகா.

நாளடைவில், உடல் நலம் குன்றி படுத்த படுக்கையாக இருக்கிறார். தாய்ப்பாசத்தால், அவரை பார்க்க வருகிறார், கமலா காமேஷ். "அம்மா! நான் ஒரு நிமிட சலனத்தால் வீட்டை விட்டு வெளியேறினாலும், உடலில் களங்கப்படாதவள்'' என்று கூறி, நடந்ததையெல்லாம் கூறுகிறார்.

"நீ என் மகள்! நீ களங்கப்பட்டிருக்க மாட்டாய் என்று எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருந்தது'' என்பார், கமலா காமேஷ்.

"அம்மா! சாவதற்கு முன் அவரை (ரஜினி) ஒரு முறை நான் பார்க்க வேண்டும். மன்னிப்பு கேட்கவேண்டும்!'' என்று தாயிடம் கூறுகிறார், அம்பிகா.

கடைசி ஆசை

அம்பிகா களங்கமற்றவர் என்பதை அறியும் ரஜினி, அவரை பார்க்கச் செல்வார். கணவரை பார்த்துக் கதறுவார், அம்பிகா.

"என் மனதில் நீண்ட காலமாக ஒரு சுமை இருந்தது. நீ களங்கப்படவில்லை என்று அறிந்ததும், அந்த சுமை இறங்கி விட்டது. ஒரு சின்ன சபலம் கூட, ஒரு பெண்ணின் வாழ்க்கையை வீணாக்கி விடும் என்பதற்கு உன் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு'' என்பார், ரஜினி.

"நான் அதிக நாளைக்கு உயிர் வாழமாட்டேன். நான் இறந்தால், எனக்கு செய்ய வேண்டிய சடங்குகளை நீங்கள் செய்ய வேண்டும். என்னை அனாதைப் பிணமாக விட்டு விடாதீர்கள். இதுதான் என் கடைசி ஆசை'' என்று கண்ணீருடன் யாசிப்பார், அம்பிகா.

"உன் கடைசி விருப்பத்தை நிறைவேற்றுவேன்'' என்று கூறிவிட்டு நடப்பார், ரஜினி.

அடுத்த நிமிடமே, ரஜினி விட்டுச்சென்ற செருப்பருகே சுருண்டு விழுந்து உயிர் துறப்பார், அம்பிகா.

இதுபற்றி தகவல் தெரிந்ததும், ஊர் பஞ்சாயத்து கூடும். (பஞ்சாயத்து தலைவர் அம்பிகாவின் அப்பாதான்)

அம்பிகா ஏற்கனவே கிராமத்தை விட்டு விலக்கி வைக்கப்பட்டவர் என்பதால், அவர் உடலை அனாதைப்பிணமாக கருதி தகனம் செய்வது என்று முடிவு செய்யப்படும். தகனச் செலவுகளுக்காக வெட்டியானுக்கு 36 ரூபாய் 50 பைசாவை பஞ்சாயத்து வழங்கும்.

இதை அறியும் ரஜினி, அம்பிகாவின் உடலை தான் தகனம் செய்யப்போவதாக அறிவிப்பார்.

"பஞ்சாயத்தின் கட்டளையை மீறினால், நீங்களும் ஊரை விட்டு வெளியேற வேண்டியதுதான்'' என்று பஞ்சாயத்து தலைவர் கூறுவார்.

அதையும் மீறி, அம்பிகாவின் உடலை தன் இரு கைகளாலும் தூக்கிச்சென்று தகனம் செய்து விட்டு, ஊரை விட்டு வெளியேறுவார், ரஜினி.

ராதாவும், மகளும் அவருடன் செல்வார்கள்.

அம்பிகா நடிப்பு

இப்படத்தில் ரஜினிகாந்த் மட்டுமின்றி, அம்பிகாவும் மிகச்சிறப்பாக நடித்திருந்தார். ராதா, கமலா காமேஷ், டெல்லி கணேஷ் ஆகியோரும் பாத்திரத்தை உணர்ந்து நடித்தனர்.

படத்தில் தனியாக காமெடி எதுவும் கிடையாது. 14-8-1982 அன்று இப்படம் வெளிவந்தது. முதலில் சில நாட்கள் கூட்டம் குறைவாக இருந்தது. பிறகு கூட்டம் அதிகரித்தது. பெண்களை இப்படம் அதிகமாகக் கவர்ந்தது. எனவே நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.


எஸ்.பி.முத்துராமன்

இப்படத்தின் டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் கூறியதாவது:-

"பஞ்சு அருணாசலம் கதையைச் சொன்னதுமே, படத்தில் நடிக்க ரஜினி ஒப்புக்கொண்டார். `பெண்கள் எந்த சபலத்துக்கும் ஆளாகக்கூடாது, மனசால் கூட தப்பு செய்யக்கூடாது என்ற மெசேஜ் இந்தக் கதையில் இருக்கிறது. எனவே இதில் நடிக்கிறேன்' என்றார்.

செங்கல்பட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தில்தான் படப்பிடிப்பு நடந்தது. எல்லோரும் நன்கு நடித்தனர். இளையராஜாவின் `ரீ ரிக்கார்டிங்' (பின்னணி இசை சேர்ப்பு) படத்துக்கு பலமாக அமைந்தது.

இந்தப்படம் வெளிவந்த அதே தேதியில் கமலஹாசன் நடித்த சகலகலா வல்லவனும் வெளிவந்தது. அதுவும் நான் டைரக்ட் செய்த படம்தான். அது முழுக்க முழுக்க கமர்ஷியல் படம். இரண்டு படங்களையும் டைரக்ட் செய்தது ஒருவர்தான் என்று யாரும் நம்ப மாட்டார்கள். அப்படி இரண்டு படங்களும் முற்றிலும் மாறுபட்டவை. இரண்டும் வெற்றிகரமானவை.

"எங்கேயோ கேட்ட குரல்'' படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் என்று நினைத்தோம். படம் பார்த்தவர்கள் அப்படித்தான் சொன்னார்கள்.

ஆனால் தேசிய விருது கிடைக்கவில்லை. என்றாலும் மக்களின் பாராட்டு நிறைய கிடைத்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது''

இவ்வாறு டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் கூறினார்.