
"ஏவி.எம்'' தயாரித்த "ராஜா சின்ன ரோஜா'' என்ற படத்துக்காக, மிகுந்த பொருட்செலவில் இந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
இந்தப்படம் 1989-ல் தயாரிக்கப்பட்டதாகும். கதை-வசனத்தை பஞ்சு அருணாசலம் எழுதினார். எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்தார்.
பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுத, சந்திரபோஸ் இசை அமைத்தார்.
இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கவுதமி நடித்தார்.
மற்றும் ராகவி, ஷாலினி, கோவை சரளா, எஸ்.எஸ்.சந்திரன், சின்னிஜெயந்த் ஆகியோர் நடித்தனர்.
புதுமை
இந்தப் படத்தில் ரஜினி, கவுதமி மற்றும் 5 குழந்தைகம் இடம் பெறும் பாடல் காட்சி ஒன்று வருகிறது. அந்த பாடல் காட்சியில், இந்த 7 பேருடன் யானை, முயல், குரங்கு முதலான மிருகங்கம் (கார்ட்டூன்களாக) ஆடிப்பாடுவது போல் படமாக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
இதற்கு முன் கார்ட்டூன் சினிமா படங்கம் உருவாகியிருந்தபோதிலும், மனிதர்களுடன் கார்ட்டூன்கம் சேர்ந்து நடிப்பது இந்தியாவிலேயே இதுவே முதல் தடவை.
இப்படி கார்ட்டூன் காட்சிகம் அமைப்பதில், மும்பையைச் சேர்ந்த ராம்மோகன் பெரிய நிபுணர். அவர் ரொம்ப `பிசி'யாக இருந்த காலக்கட்டம் அது.
எனவே, பட அதிபர் ஏவி.எம்.சரவணன், முத்துராமனை அழைத்து, "படத்துக்கு இந்த அனிமேஷன் காட்சி முக்கியம். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. அதை சிறப்பாக எடுக்க வேண்டும். `அனிமேஷன்' நிபுணர் ராம்மோகன் ரொம்ப பிசியாக இருப்பதாக அறிந்தேன். நீங்கம் உடனடியாக மும்பை சென்று, அவருடைய சம்மதத்தைப் பெற்று வாருங்கம்'' என்றார்.
பூஜை அன்றே பயணம்
எனவே, படத்துக்கு பூஜை போடப்பட்ட அன்றே விமானம் மூலமாக முத்துராமன் மும்பை சென்றார். ராம்மோகனை சந்தித்து, விஷயத்தைச் சொன்னார்.
"இந்த மாதிரியான `அனிமேஷன்' பாடல் காட்சி எடுக்க, நான் 80 ஆயிரம் படங்களை வரையவேண்டும். அதற்கு ரொம்ப அவகாசம் வேண்டும். இப்போது எனக்கும்ள வேலையில், இந்த பொறுப்பை ஏற்பது இயலாத காரியம்'' என்று ராம்மோகன் கூறினார்.
ஆனால், முத்துராமன் விடவில்லை. "ஏவி.எம். எதையும் திட்டமிட்டு படமாக்கும் நிறுவனம். இந்த பாடல் காட்சியை முதலாவதாக படமாக்கி, உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். உடனடியாக நீங்கம் படம் வரைய ஆரம்பித்துவிடலாம். அதன்பின் 6 மாதம் கழித்துத்தான் படம் ரிலீஸ் ஆகும். உங்கம் வேலையை செய்து முடிக்க, போதுமான அவகாசம் கிடைக்கும்'' என்றார்.
அதன் பேரில், கார்ட்டூன்கம் வரைய ராம்மோகன் சம்மதித்தார்.
படமாக்கியது எப்படி?
"இந்தக் காட்சியை படமாக்கியது எப்படி?'' என்று முத்துராமனிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
"இந்த பாடல் காட்சியில் ரஜினி, கவுதமி ஆகியோருடன் 5 குழந்தைகம் பங்கு கொண்டார்கம்.
அவர்களுடன் யானை, முயல், குரங்கு முதலான மிருகங்கம் ஓடியாடுவது வெறும் கற்பனைதான். அக்காட்சியில் யானை எங்கிருந்து வரும், முயல் எப்படி ஓடி வரும் என்பதையெல்லாம் உதவியாளர்கம் விளக்கி, நடித்துக் காட்டினார்கம்.
அந்த மிருகங்கம் அந்தந்த இடங்களில் இருப்பதாக ரஜினியும், மற்றவர்களும் கற்பனை செய்துகொண்டு நடித்தார்கம்.
இதை நாங்கம் படமாக்கி மும்பை அனுப்பினோம். அதற்கு ஏற்றபடி, ராம்மோகன் கார்ட்டூன்கம் வரைந்தார். அவற்றையெல்லாம் அந்தந்த இடத்தில் பொருத்தமாக இணைத்து பாடல் காட்சியை உருவாக்கினோம்.
சிரமமும், பணச்செலவும் அதிகமாக இருந்தபோதிலும், அந்தக் காட்சி அழகாக அமைந்தது. குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்தது.
`குழந்தைகளை பெற்றோர்கம் பொறுப்போடு வளர்க்க வேண்டும். வேலைக்காரர்களிடம் விட்டுவிடக்கூடாது' என்ற கருத்தை இந்தப்படம் வலியுறுத்தியது. இதற்கு அந்தப் பாடல் காட்சி உதவியது.

குழந்தைகம்
இந்தக் காட்சியின் மூலம், தமிழ்நாட்டுக் குழந்தைகளின் மனதை ரஜினி வெகுவாகக் கவர்ந்தார்.
எங்கு போனாலும், "ரஜினி அங்கிம், ரஜினி அங்கிம்'' என்று குழந்தைகம் கூடிவிடுவார்கம்.
ஒருநாம் மூணாறில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, ரஜினியும், படப்பிடிப்புக்குழுவினரும் திரும்பிக் கொண்டிருந்தோம்.
ஒரு இடத்தில் ரோட்டில் சுமார் நூறு குழந்தைகம் கூடி நின்றார்கம். அனைவரும் பம்ளிக்கூட சீருடை அணிந்திருந்தார்கம்.
`ரஜினி அங்கிம் இந்த வழியாக வருவதாகக் கேம்விப்பட்டோம். அவரைப் பார்த்துவிட்டுப் போக, பம்ளிக்கூடத்திலிருந்து நேராக இங்கே வந்திருக்கிறோம்' என்றார்கம்.
அவர்களுடன் ரஜினி அன்புடன் பழகினார். ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார். "நன்றாகப் படிக்க வேண்டும்'' என்று முத்தம் கொடுத்து வாழ்த்தினார்.''
இவ்வாறு எஸ்.பி.முத்துராமன் கூறினார்.
20-7-1989 அன்று வெளிவந்த "ராஜா சின்ன ரோஜா'' 7 தியேட்டர்களில் நூறு நாட்கம் ஓடியது. அதன்பின் பகல்காட்சியாக தொடர்ந்து ஓடி வெம்ளி விழா கொண்டாடியது.
இந்தப்படம், தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு, அங்கும் வெற்றிகரமாக ஓடியது.
சிவா
கே.பாலசந்தரின் கவிதாலயா தயாரித்த படம் "சிவா.'' இதில் ரஜினிகாந்த், சோபனா நடித்தனர்.
வசனத்தை கண்ணன் எழுத, அமீர்ஜான் இயக்கினார். இசை: இளையராஜா.
5-5-1989-ல் வெளிவந்த இப்படம் 75 நாம் ஓடியது.
No comments:
Post a Comment