Monday, 16 June 2014

சினிமாவில் சேர ஆசை வந்தது எப்படி?

ரஜினிகாந்த் வாழ்க்கைப்பாதை
சினிமாவில் சேர ஆசை வந்தது எப்படி?





பஸ் கண்டக்டராக வேலை பார்த்துக்கொண்டிருந்த ரஜினிகாந்த், நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றார். அதைத்தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

ரஜினிகாந்த் சினிமா பார்க்கப்போனால் `கிï'வில் நிற்பதில்லை. ஒரு "ஜம்ப்'' செய்தால் போதும்; டிக்கெட் கொடுக்கப்படும் இடத்திற்கு போய்விடுவார்! காசு கொடுத்து டிக்கெட் வாங்கிக்கொண்டு போய் படம் பார்ப்பார்.

ரஜினி இப்படி `ஜம்ப்' செய்து தாவும்போது, கிïவில் நிற்பவர்கள் எதிர்ப்பு காட்டாமல், `கப்சிப்' என்று இருப்பார்கள். எதிர்ப்பு தெரிவித்தால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். அந்த வட்டாரத்தில் ரஜினி அவ்வளவு "பிரபலம்!''

நாடோடி மன்னன்

ஒரு சமயம் "நாடோடி மன்னன்'' படம் பார்க்க ரஜினியின் நண்பர்கள் கிளம்பினார்கள். ரஜினியின் கையில் பணம் இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தார்.

அடுத்த சில நிமிடங்களில், வீட்டில் இருந்த ஒரு வெள்ளி டம்ளர், மார்வாடி கடைக்கு இடம் பெயர்ந்தது! ரஜினிக்கு ஐந்து ரூபாய் கிடைத்தது. நண்பர்களுடன் போய், நாடோடி மன்னன் படம் பார்த்தார்.

பஸ் கண்டக்டர்

இந்த சமயத்தில், குடும்ப நண்பர் ஒருவர் மூலமாக கர்நாடகா போக்குவரத்து நிறுவனத்தில், பஸ் கண்டக்டர் வேலை கிடைத்தது. ரஜினிக்கு ஏக சந்தோஷம். கலெக்டர் வேலை கிடைத்தது போல் மகிழ்ந்து போனார்.

மகாராணி பெண்கள் கல்லூரி உள்ள சிவாஜி நகர் - சாம்ராஜ்பேட்டை ரூட்டில், 134-ம் நெம்பர் பஸ்சில்தான் கண்டக்டராக வேலை பார்த்தார், ரஜினி.

பஸ்சில் அவரை பார்ப்பவர்கள் கண்டக்டர் என்றே நம்பமாட்டார்கள். அந்த அளவுக்கு `டிப்டாப்' ஆக உடை அணிவார். பயணிகளுக்கு `டிக்கெட்' கிழித்துக் கொடுப்பதும், "ரைட்... ரைட்'' என்று கூறுவதும் தனி ஸ்டைலாக இருக்கும்.

கல்லூரி மாணவிகளும், இளம் பெண்களும், "ஆள் கறுப்பு என்றாலும், அந்த கண்டக்டர் படு ஸ்டைலுடி!'' என்று தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொள்வார்கள்!

எங்கேயோ கேட்ட குரல்!

ஒருநாள், வேலை முடிந்து ரஜினிகாந்த் வீட்டுக்கு நடந்து போய்க்கொண்டிருந்தார். ஒரு தெருவில் போகும்போது, "ஐயோ! என்னைக் கொன்னுடாதே! விட்டு விடு!'' என்று ஒரு பெண் அலறும் சத்தம் கேட்டது.

யாரோ ஒருவன், ஒரு பெண்ணை கெடுக்க முயற்சிக்கிறான் என்று நினைத்தார், ரஜினி. குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினார். ஒரு பெரிய சுவருக்கு மறுபக்கத்தில் இருந்து அக்குரல் கேட்டது. `ஜம்ப்' செய்து மறுபக்கம் குதித்தார்.

அங்கே ஒரு ரவுடியின் கையில் சிக்கி, இளம் பெண் ஒருத்தி துடித்துக் கொண்டிருந்தாள். ரவுடியின் கையில் கத்தி பளபளத்தது.

"டேய், ராஸ்கல்!'' என்று பாய்ந்தார், ரஜினி.

கையில் இருந்த கத்தியை கீழே போட்டு விட்டுத் திரும்பிப் பார்த்தான், ரவுடி.

"இது என்ன புதுக்குழப்பம்!'' என்று கேட்டபடி, ஒருவர் ரஜினியிடம் வந்தார்.



அவர் கையில் ஒரு நோட்டுப் புத்தகம் இருந்தது!

அது நாடக வசனப் புத்தகம் என்பதும், அங்கு நடந்து கொண்டிருந்தது நாடக ஒத்திகை என்பதும் ரஜினிக்கு உடனே புரிந்து விட்டது.

விழுந்து விழுந்து சிரித்தார்.

"இந்த நிகழ்ச்சியினால் எனக்கு நாடகத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. நாடகங்கள் போடத் தூண்டியது'' என்று கூறுகிறார், ரஜினி.

சிவாஜி வேடம்

இதன்பின் ஒரு நாடகக் குழுவை ரஜினி அமைத்தார். "ஜ×வாலை'' என்ற நாடகத்தை அரங்கேற்றினார்.

அந்த நாடகம் மராட்டிய
மாவீரர் சத்ரபதி சிவாஜியைப் பற்றியது. சிவாஜி வேடத்தில் ரஜினி நடித்தார். சிவாஜிகணேசன் பாணியைப் பின்பற்றி நடித்தார்.

கையில் தீப்பந்தத்தை பிடித்துக்கொண்டு வீராவேசமாக சிவாஜி பேசுவது போல் ஒரு கட்டம். சிவாஜிகணேசன் பாணியிலேயே சிம்ம கர்ஜனை செய்தார், ரஜினி. கூடியிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

உற்சாகம் அடைந்த ரஜினி, தீப்பந்தத்தை மேலும் தூக்கிப் பிடித்தபடி, வீரவசனத்தைத் தொடர்ந்து பேசினார்.

நாடகத் திரையில் தீப்பந்தம் பட்டு, தீ பிடித்துக்கொண்டது!

கூடியிருந்தவர்கள் "தீ... தீ...'' என்று கத்திக்கொண்டே சிதறி ஓடினார்கள்.

அப்போதுதான் வீர வசனத்தை நிறுத்தினார், ரஜினி!

துரியோதனன்

ஒருநாள் இப்படி தீ விபத்து ஏற்பட்டாலும், தொடர்ந்து நாடகங்கள் நடத்தி வந்தார், ரஜினி.

"குருசேத்திரம்'' என்ற நாடகத்தில், துரியோதனன் வேடத்தில் நடித்தார். அவர் நடிப்புக்கு ஏக வரவேற்பு.

நாடகம் முடிந்ததும், முன்னிலை வகித்த கர்நாடகா போக்கு வரத்து அதிகாரி, மேடைக்கு வந்தார்.

"நம்முடைய சிவாஜிராவ் (ரஜினி) பிரமாதமாக நடித்தார். விரைவில் அவர் சினிமாவில் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அந்த அளவுக்கு அவர் நடிப்பு பிரமாதம்!'' என்று புகழ்ந்தார்.

இதைக் கேட்டு பூரித்துப் போனார், ரஜினி.

தொடர்ந்து நாடகங்கள் நடத்தினார். அவர் நடிப்பை சக ஊழியர்கள் புகழ்ந்தனர்.

ஆனால், ரஜினியின் அப்பாவுக்கு மட்டும், மகன் நாடகத்தில் நடிப்பது கொஞ்சமும் பிடிக்கவில்லை. "மாலை நேர கல்லூரியில் சேர்ந்து படி. போலீசில் சேர்ந்து பெரிய அதிகாரியாகலாம்!'' என்று கூறிக்கொண்டிருந்தார்.



ஆனால், ரஜினிக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு, நாளுக்கு நாள் வளர்ந்தது. சிலர், அவருடைய கறுப்பு நிறத்தை கேலியாகக் குறிப்பிடுவார்கள். ஆனால், ரஜினி அதையெல்லாம் பொருட்படுத்துவது இல்லை. சினிமாவில் சேர்ந்தே தீரவேண்டும், நடிகனாக வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டார்.

இதுபற்றி தன்னுடைய நெருங்கிய நண்பரான புட்ராஜிடம் தெரிவித்தார்.

"சினிமாவில் நடித்தால் நீ நிச்சயம் பெரிய நடிகனாக வருவாய். உன் ஸ்டைல் உனக்கு ரொம்ப உதவும்'' என்றார், புட்ராஜ்.

`கண்டக்டர் வேலைக்கு எப்போது முழுக்குப் போடுவது, எப்போது சினிமாவில் சேருவது' என்று சதா யோசித்தபடி இருந்தார், ரஜினி.

அதற்கான வாய்ப்பு, எதிர்பாராமல் வந்தது.

No comments:

Post a Comment