ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' 148 நாள் ஓடியது

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா''வில், ரஜினிகாந்தும், ஸ்ரீதேவியும் இணைந்து நடித்தனர். இந்தப்படம் 148 நாள் ஓடியது.
இந்தப்படம், "சுட்டலுன்னாரு ஜாக்ரதா'' என்ற தெலுங்குப் படத்தைத் தழுவி தயாரிக்கப்பட்டது.
இந்தப்படத்துக்கு, பஞ்சு - அருணாசலம் திரைக்கதை, வசனம் எழுதினார். கண்ணதாசனும், கங்கை அமரனும் எழுதிய பாடல்களுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார்.
முத்துராமன்
ஏவி.எம்.மின் ஆஸ்தான டைரக்டரான எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்தார்.
அடிதடி நிறைந்த படம். ரஜினிக்கு ஏற்ற கதை. இரட்டை வேடம். ஆக்ஷன் ஹீரோவாக ரசிகர்களைக் கவர்ந்தார்.
இப்படத்தில் ரஜினியுடன் ஸ்ரீதேவி, ராதிகா, மனோரமா, தாம்பரம் லலிதா, முத்துராமன், ஒய்.ஜி.மகேந்திரன், அசோகன் நடித்தனர்.
1982 பொங்கலுக்கு வெளிவந்த இந்தப்படம், 148 நாள் ஓடியது.
பேச்சுத்திறமை
இந்தக் காலக்கட்டத்தில் ரஜினி எப்படி இருந்தார் என்பது பற்றி ஏவி.எம்.சரவணன் கூறியதாவது:-
"இப்போதெல்லாம் மேடைகளில் ரஜினி பிரமாதமாகப் பேசுகிறார். ஆரம்பத்தில் பொது நிகழ்ச்சிகளில் பேசவே கூச்சப்பட்டு, மறுத்து விடுவார்.
எங்கள் தயாரிப்பான "போக்கிரிராஜா'' படத்தின் வெற்றி விழாவில் பேசவேண்டும் என்று ரஜினியிடம் முன்கூட்டியே சொன்னபோது அவர் தயங்கி மறுத்துவிட்டார். இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்தான் அவரிடம், "பயப்படாதீங்க. நீங்கள் என்ன பேசவேண்டும் என்று நான் காகிதத்தில் எழுதிக் கொடுத்து விடுகிறேன். அதை அப்படியே படித்துவிடுங்கள்'' என்று தைரியமூட்ட, ரஜினி பேச ஒப்புக்கொண்டார்.
பேச்சுத்திறன்
எழுதிக்கொடுத்த பேச்சை, நிகழ்ச்சியின்போது ஓர் ஐந்து நிமிடத்துக்குத்தான் படித்திருப்பார். அவ்வளவுதான். அதன் பிறகு, பேச்சு எழுதப்பட்ட பேப்பரை மடித்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, தானே தன்னிச்சையாகப் பேச ஆரம்பித்துவிட்டார்.
இப்போதுகூட, `சாதாரண ஆளான என்னை மேடைப்பேச்சாளராக்கியவர்கள் எஸ்.பி.முத்துராமனும், ஏவி.எம்.சரவணனும்தான்' என்று தவறாமல் தமாஷாகக் குறிப்பிடுவார், ரஜினி''
இவ்வாறு ஏவி.எம்.சரவணன் கூறியுள்ளார்.

தனிக்காட்டுராஜா
இதே ஆண்டு, ரஜினியும், ஸ்ரீதேவியும் ஜோடியாக நடித்த மற்றொரு படம் "தனிக்காட்டுராஜா.'' டி.ராமா நாயுடுவின் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு.
இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியதோடு, டைரக்ஷனையும் கவனித்தவர் வி.சி.குகநாதன்.
வாலியின் பாடல்களுக்கு, இளையராஜா இசை அமைத்தார்.
இப்படத்தில் ஸ்ரீபிரியா, சத்யகலா, ஒய்.விஜயா, ஸ்ரீலட்சுமி, சில்க் சுமிதா, ஜெய்சங்கர், விஜயகுமார், ராஜேஷ், சுந்தர்ராஜன், வி.கே.ராமசாமி, தேங்காய் சீனிவாசன், மனோரமா, சங்கிலிமுருகன், வி.எஸ்.ராகவன், வெண்ணிற ஆடை மூர்த்தி, ஐசரி வேலன், செந்தாமரை, ஒய்.ஜி.மகேந்திரன், ஐ.எஸ்.ஆர். என்று ஒரே நட்சத்திரக் கூட்டம் நிறைந்திருந்தது.
12-3-1982-ல் வெளியான இப்படம், சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் "டப்'' செய்யப்பட்டது.
வி.சி.குகநாதன்
இந்தப்படம் தயாரானபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி, படத்தின் டைரக்டரும், கதை-வசன கர்த்தாவுமான வி.சி.குகநாதன் கூறியதாவது:-
"பட அதிபர் ராமா நாயுடு தயாரித்த 4, 5 தெலுங்குப் படங்களை நான் டைரக்ட் செய்து, அவை மாபெரும் வெற்றிப்படங்களாக அமைந்தன.
அவர் என்னை அழைத்து, "உங்கள் திறமையாலும், உழைப்பினாலும் பல வெற்றிப் படங்களை என்னால் தயாரிக்க முடிந்தது. உங்களுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன். என்ன வேண்டும்?'' என்று கேட்டார்.
நான் வீடு, கார் என்று ஏதாவது கேட்பேன் என்று அவர் நினைத்தார். ஆனால் நான் வேறு விதமாக என் விருப்பத்தைத் தெரிவித்தேன்.
ரஜினி - கமல்
"தமிழில் உங்களுக்காக ஒரு பிரமாண்டமான படத்தை தயாரிக்க விரும்புகிறேன். அதில் ரஜினி, கமல் இருவரும் நடிக்க வேண்டும். அவர்களை `புக்' செய்து கொடுங்கள்'' என்று கூறினேன்.
அதற்கு ராமாநாயுடு சம்மதித்தார். ரஜினி, கமல் இருவருக்கும் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது.
படத்தை "70 எம். எம்''ல் பிரமாண்டமாக எடுக்கத் தீர்மானித்தோம்.

கமல் வாபஸ்
ஆனால், திடீரென்று ஒருநாள் கமலஹாசனின் அண்ணன் சாருஹாசன் வந்து ராமாநாயுடுவை சந்தித்தார். ரஜினியும், கமலும் சேர்ந்து நடிப்பதில்லை என்று ஏற்கனவே முடிவு செய்திருப்பதாகவும், அதனால் இப்படத்தில் கமல் நடிக்க இயலாது என்றும் கூறி, அட்வான்சை திருப்பிக் கொடுத்துவிட்டார்.
இதனால் ராமாநாயுடு வருத்தம் அடைந்தார். என்னை அழைத்து, "என்ன செய்யலாம்?'' என்று கேட்டார்.
"பரவாயில்லை. புகழ் பெற்ற நட்சத்திரங்கள் நிறைய பேரை நடிக்க வைத்து படத்தை சிறப்பாகவே தயாரிப்போம்'' என்றேன்.
அதன்படி பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டதுதான் "தனிக்காட்டுராஜா.''
இவ்வாறு குகநாதன் குறிப்பிட்டார்.

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா''வில், ரஜினிகாந்தும், ஸ்ரீதேவியும் இணைந்து நடித்தனர். இந்தப்படம் 148 நாள் ஓடியது.
இந்தப்படம், "சுட்டலுன்னாரு ஜாக்ரதா'' என்ற தெலுங்குப் படத்தைத் தழுவி தயாரிக்கப்பட்டது.
இந்தப்படத்துக்கு, பஞ்சு - அருணாசலம் திரைக்கதை, வசனம் எழுதினார். கண்ணதாசனும், கங்கை அமரனும் எழுதிய பாடல்களுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார்.
முத்துராமன்
ஏவி.எம்.மின் ஆஸ்தான டைரக்டரான எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்தார்.
அடிதடி நிறைந்த படம். ரஜினிக்கு ஏற்ற கதை. இரட்டை வேடம். ஆக்ஷன் ஹீரோவாக ரசிகர்களைக் கவர்ந்தார்.
இப்படத்தில் ரஜினியுடன் ஸ்ரீதேவி, ராதிகா, மனோரமா, தாம்பரம் லலிதா, முத்துராமன், ஒய்.ஜி.மகேந்திரன், அசோகன் நடித்தனர்.
1982 பொங்கலுக்கு வெளிவந்த இந்தப்படம், 148 நாள் ஓடியது.
பேச்சுத்திறமை
இந்தக் காலக்கட்டத்தில் ரஜினி எப்படி இருந்தார் என்பது பற்றி ஏவி.எம்.சரவணன் கூறியதாவது:-
"இப்போதெல்லாம் மேடைகளில் ரஜினி பிரமாதமாகப் பேசுகிறார். ஆரம்பத்தில் பொது நிகழ்ச்சிகளில் பேசவே கூச்சப்பட்டு, மறுத்து விடுவார்.
எங்கள் தயாரிப்பான "போக்கிரிராஜா'' படத்தின் வெற்றி விழாவில் பேசவேண்டும் என்று ரஜினியிடம் முன்கூட்டியே சொன்னபோது அவர் தயங்கி மறுத்துவிட்டார். இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்தான் அவரிடம், "பயப்படாதீங்க. நீங்கள் என்ன பேசவேண்டும் என்று நான் காகிதத்தில் எழுதிக் கொடுத்து விடுகிறேன். அதை அப்படியே படித்துவிடுங்கள்'' என்று தைரியமூட்ட, ரஜினி பேச ஒப்புக்கொண்டார்.
பேச்சுத்திறன்
எழுதிக்கொடுத்த பேச்சை, நிகழ்ச்சியின்போது ஓர் ஐந்து நிமிடத்துக்குத்தான் படித்திருப்பார். அவ்வளவுதான். அதன் பிறகு, பேச்சு எழுதப்பட்ட பேப்பரை மடித்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, தானே தன்னிச்சையாகப் பேச ஆரம்பித்துவிட்டார்.
இப்போதுகூட, `சாதாரண ஆளான என்னை மேடைப்பேச்சாளராக்கியவர்கள் எஸ்.பி.முத்துராமனும், ஏவி.எம்.சரவணனும்தான்' என்று தவறாமல் தமாஷாகக் குறிப்பிடுவார், ரஜினி''
இவ்வாறு ஏவி.எம்.சரவணன் கூறியுள்ளார்.

தனிக்காட்டுராஜா
இதே ஆண்டு, ரஜினியும், ஸ்ரீதேவியும் ஜோடியாக நடித்த மற்றொரு படம் "தனிக்காட்டுராஜா.'' டி.ராமா நாயுடுவின் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு.
இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியதோடு, டைரக்ஷனையும் கவனித்தவர் வி.சி.குகநாதன்.
வாலியின் பாடல்களுக்கு, இளையராஜா இசை அமைத்தார்.
இப்படத்தில் ஸ்ரீபிரியா, சத்யகலா, ஒய்.விஜயா, ஸ்ரீலட்சுமி, சில்க் சுமிதா, ஜெய்சங்கர், விஜயகுமார், ராஜேஷ், சுந்தர்ராஜன், வி.கே.ராமசாமி, தேங்காய் சீனிவாசன், மனோரமா, சங்கிலிமுருகன், வி.எஸ்.ராகவன், வெண்ணிற ஆடை மூர்த்தி, ஐசரி வேலன், செந்தாமரை, ஒய்.ஜி.மகேந்திரன், ஐ.எஸ்.ஆர். என்று ஒரே நட்சத்திரக் கூட்டம் நிறைந்திருந்தது.
12-3-1982-ல் வெளியான இப்படம், சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் "டப்'' செய்யப்பட்டது.
வி.சி.குகநாதன்
இந்தப்படம் தயாரானபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி, படத்தின் டைரக்டரும், கதை-வசன கர்த்தாவுமான வி.சி.குகநாதன் கூறியதாவது:-
"பட அதிபர் ராமா நாயுடு தயாரித்த 4, 5 தெலுங்குப் படங்களை நான் டைரக்ட் செய்து, அவை மாபெரும் வெற்றிப்படங்களாக அமைந்தன.
அவர் என்னை அழைத்து, "உங்கள் திறமையாலும், உழைப்பினாலும் பல வெற்றிப் படங்களை என்னால் தயாரிக்க முடிந்தது. உங்களுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன். என்ன வேண்டும்?'' என்று கேட்டார்.
நான் வீடு, கார் என்று ஏதாவது கேட்பேன் என்று அவர் நினைத்தார். ஆனால் நான் வேறு விதமாக என் விருப்பத்தைத் தெரிவித்தேன்.
ரஜினி - கமல்
"தமிழில் உங்களுக்காக ஒரு பிரமாண்டமான படத்தை தயாரிக்க விரும்புகிறேன். அதில் ரஜினி, கமல் இருவரும் நடிக்க வேண்டும். அவர்களை `புக்' செய்து கொடுங்கள்'' என்று கூறினேன்.
அதற்கு ராமாநாயுடு சம்மதித்தார். ரஜினி, கமல் இருவருக்கும் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது.
படத்தை "70 எம். எம்''ல் பிரமாண்டமாக எடுக்கத் தீர்மானித்தோம்.

கமல் வாபஸ்
ஆனால், திடீரென்று ஒருநாள் கமலஹாசனின் அண்ணன் சாருஹாசன் வந்து ராமாநாயுடுவை சந்தித்தார். ரஜினியும், கமலும் சேர்ந்து நடிப்பதில்லை என்று ஏற்கனவே முடிவு செய்திருப்பதாகவும், அதனால் இப்படத்தில் கமல் நடிக்க இயலாது என்றும் கூறி, அட்வான்சை திருப்பிக் கொடுத்துவிட்டார்.
இதனால் ராமாநாயுடு வருத்தம் அடைந்தார். என்னை அழைத்து, "என்ன செய்யலாம்?'' என்று கேட்டார்.
"பரவாயில்லை. புகழ் பெற்ற நட்சத்திரங்கள் நிறைய பேரை நடிக்க வைத்து படத்தை சிறப்பாகவே தயாரிப்போம்'' என்றேன்.
அதன்படி பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டதுதான் "தனிக்காட்டுராஜா.''
இவ்வாறு குகநாதன் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment